Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையம், நாராயண நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பாக சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பாரதி அவர்கள் மற்றும் நவநீதன் உதவி தலைமை ஆசிரியர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தைகளுக்கு போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு விடியல் பிரகாஷ் பரிசு புத்தகங்களை வழங்கி பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி கவிஞர் சதா அன்புராஜ் கவிதை வாசித்தார்.
இனிய விழாவில் பிரபு அவர்கள். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ரதி, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ச்செல்வி, இல்லம் தேடி கல்வியாசிரியர் ஜெயந்தி மற்றும் தீனா உதவி கரம் அங்கப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.